Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட வாய்ப்பு உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2-ம் ஆண்டு விழா வருகிற 15-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. விழாவில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று கட்சிக் கொடி ஏற்றி வைக்கிறார்.
இந்த விழாவில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து வார்டு அவைகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
அப்போது தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட வாய்ப்பு உள்ளது.